அப்படி அப்படியே நின்ற லோக்கல் ரயில்கள்.. சென்னையில் திடீர் பரபரப்பு

x

சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை உயர்மின் அழுத்த கோளாறு காரணமாக பாதிப்படைந்துள்ளது. கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பொன்னேரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் நான்கு வழிப்பாதை கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தொடர்ந்து புறநகர் ரயில்கள் கால தாமதமாக இயக்கப்பட்டு வருவதாக பயணிகள் புகார் கூறினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்