ஆப்-ல் கடன்... பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... வெளியான ஆபாச புகைப்படங்கள்.... லட்சக்கணக்கில் பணம் பறித்த கொடூர கும்பல்... அதிர வைக்கும் பின்னணி

x
  • திருச்சி மாவட்டம் நொச்சியம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், பைசா ஹோம் என்ற கடன் செயலியில், 3 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, பின்னர் படிப்படியாக 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார்.
  • கடனை திரும்ப செலுத்துவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், திடீரென அவரது செல்போனை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், நிலுவைத் தொகைக்கு அதிக வட்டி கட்ட வேண்டும் என கனத்த குரலில் பேசி மிரட்டியுள்ளார்.
  • பயந்து போன பெண், ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தியும், தொடர்ந்து பணம் கேட்டு அந்தக் கும்பல் மிரட்டி வந்துள்ளது.
  • ஒரு கட்டத்தில் பெண்ணின் புகைப்படத்தை தவறாக மார்பிங் செய்து, அவரது வீட்டிற்கு அருகில் உள்ள சிலரின் செல்போன் எண்ணுக்கு அந்தக் கும்பல் அனுப்பியுள்ளது.
  • இதனை அறிந்து மனவேதனை அடைந்த அந்தப் பெண், இதுதொடர்பாக சைபர் கிரைமில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்