உயிரை பறிக்கும் சீன கடன் செயலி - மாநில அரசுக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

x

உயிரை பறிக்கும் சீன கடன் செயலி - மாநில அரசுக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியா முழுவதும் விரைவில் கடன் என சீன கடன் செயலிகள் கைவரிசையை காட்டும் சம்பவம் அதிகரித்துள்ளன. கொடுக்கும் கடன் தொகைக்கு கொடுமையாக வட்டியை வசூலித்து, பணத்தை கொள்ளையடிப்பதுடன், கடன் வாங்கியவர்கள் சுய விபரங்களை திருடி அவர்களை மிரட்டவும் செய்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்திருப்பதுடன், பல கோடி சீனா சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளன. இந்த நிலையில் சீன கடன் செயலி சம்பவங்களில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கையை எடுக்குமாறு மாநில அரசுக்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. சீன கடன் செயலிகளால் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் குடிமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இதுபோன்ற செயலிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்