லோடு ஆட்டோ டிரைவர் எரித்துக் கொலை... ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட குடும்பத்தினர்

x

கோவையில் எரித்துக் கொல்லப்பட்ட லோடு ஆட்டோ ஓட்டுனரின் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீரியம்பாளையத்தைச் சேர்ந்த ரவி என்பவர் மீது நேரு நகரைச் சேர்ந்த பூபாலன் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த ரவி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் பூபாலனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், ரவியின் குடும்பத்தினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரி ஆட்சியரிடம் மனு அளித்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்