🔴LIVE : கால்கள் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு | நேரலை காட்சிகள் | FootballPlayer

x

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு

கொளத்தூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியாவுக்கு, கால் முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை, கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு அவருக்கு தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் வலது காலில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரியாவின் கால் அகற்றப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரியாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்தார். பிரியாவின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனை வளாகத்தில் அவரது உறவினர்கள் கதறி அழுதது, உருக்கத்தை ஏற்படுத்தியது.சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடற்கூராய்வு நிறைவு...பிரியா உடலை எடுத்துச்செல்லும் அமரர் ஊர்தி முன்பு உறவினர்கள், நண்பர்கள் தர்ணா... மருத்துவர்களை கைது செய்ய வலியுறுத்தல்...


Next Story

மேலும் செய்திகள்