லிவ்-இன் ரிலேஷன்ஷிப் விவகாரம்... - உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை..!

x

இது தொடர்பாக ஹரியானாவை சேர்ந்த வழக்குரைஞர் மம்தா ராணி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், லிவ்-இன் உறவில் இருப்பவர்களை கட்டாயமாக பதிவு செய்வதற்கு விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது லிவ்-இன் உறவில் இருப்பவர்களின் சமூக பாதுகாப்பு கருத்தில் கொண்டு கட்டாயமாக பதிவு செய்வதற்கு விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை நிராகரித்த உச்சநீதிமன்றம் இதில் மத்திய அரசின் பங்கு என்ன என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர் இது போன்ற அர்த்தமற்ற மனுவுக்கு, அபராதம் விதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்