ஆட்டோவில் ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை எரித்த லிவ்-இன் காதலன்.... சென்னை சாலையில் பயங்கரம்

x

சென்னை, ஆவடி அருகே தகாத உறவில் ஏற்பட்ட விரிசலில் தொடர்பில் இருந்த பெண்ணை காதலனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது....

ஆவடி அருகே கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்தவர் சுதா. இவருக்கு 2014 ஆம் ஆண்டு சுரேஷ் என்பவருடன் திருமணாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவரை பிரிந்த சுதா தனியே வசித்து வந்துள்ளார். இதில், தனியார் கல்லூரி உணவகத்தில் பணிபுரிந்து வந்த சுதாவுக்கும், அங்கு உடன் பணியாற்றிய செளந்திரபாண்டியன் என்பவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. தொடர்ந்து, இருவரும் தனியாக வீடு எடுத்து ஒரு வருடமாக வசித்து வந்த நிலையில், இருவருக்குமிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், செளந்திரபாண்டியனை விட்டு பிரிந்த சுதா, அவரின் தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில், அங்கு ஆட்டோவில் சென்ற செளந்திரபாண்டியன், சுதாவை தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு சுதா மறுப்பு தெரிவிக்கவே, அவர் மீது பெட்ரோல் ஊற்றி செளந்திரபாண்டியன் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, 60 சதவீத தீக்காயங்களுடன் சுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், செளந்திர பாண்டியனை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்