மதுபான கடை ஊழியரை தாக்கி..மதுபான பாட்டில்களை எடுத்துச் செல்லும் கும்பல்! - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x

புதுச்சேரியில், மதுபான கடை ஊழியரை தாக்கி, மதுபான பாட்டில்களை எடுத்துச் சென்ற பிரபல ரவுடி உட்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பாகூர் தொகுதிக்கு உட்பட்ட சோரியாங்குப்பத்தில் உள்ள மதுபான கடை ஒன்றில், அந்தப் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான ஆறுமுகம், சுகன் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் இலவசமாக மதுபானம் கேட்டு பிரச்சினை செய்துள்ளனர். எனினும், 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கொடுத்தும், அது போதாது எனக்கூறி, ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகள் ஊழியர்களை தாக்கி, கூடுதலாக மதுபான பாட்டில்களை அட்டை பெட்டியில் எடுத்துக் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்