பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா? - போலீஸ் ரெய்டில் வெளிவந்த அதிர்ச்சி - சிக்கிய ஆவணங்கள்

சென்னையில் அதிரடி சோதனை மேற்கொண்ட போலீசார், ஆரூன் ரஷித் என்பவர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மற்றும் மின்னணு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்த 4 இடங்களில், சென்னை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதன்படி, முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஆரூன் ரஷித் என்பவரின் வீடு மற்றும் கம்பெனியில் சோதனையிட்டனர். இதில், 15 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம், 57 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் மின்னனு பொருட்கள், லேப்டாப், ஏடிஎம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனா​ர். இதுதொடர்பாக வழக்குபதிந்துள்ள போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும், மின்னனுப்பொருட்களை தடயவியல் துறையினருக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com