தந்தையுடன் 4 மகன்களுக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

x

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த 2017ம் ஆண்டு சுந்தரபாண்டியன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, இறந்தவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த, வழக்கு கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அன்பழகன் மற்றும் அவர்களது மகன்கள் 4 பேர் உட்பட 5 பேருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 13 ஆயிரத்து 750 ரூபாய் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்