திருமணம் செய்து கொள்வதாக கூறி அத்துமீறல்... நூலகர் மீது பாய்ந்த வழக்கு - தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீஸ்

x

சென்னை பரங்கிமலையை சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக நூலகத்தில் நூலகராக பணியாற்றி வருகிறார்.

இதே நூலகத்தில் திருச்சி, துறையூரை சேர்ந்த மணியரசு என்பவரும் நூலகராக பணியாற்றி வரும் நிலையில் திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணிடம் பழகி நெருங்கி பழகி உள்ளார்.

இதில் அந்த பெண் 2 முறை கருவுற்ற போதிலும் கருவை கலைத்த மணியரசு, திருமணம் செய்யவும் மறுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் மணியரசு மீது வழக்குப்பதிவு செய்ததோடு தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்