மத்திய உள்துறைக்கு கடிதம்..முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

x

தன்னை கைது செய்த போது அத்துமீறலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய உள்துறை செயலாளருக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உள்ளாட்சி தேர்தலின் போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர், பொய் வழக்கில் கைது செய்த‌தாக‌க் கூறி, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுத்தியுருந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளருக்கு ஜெயக்குமார் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் எழுதிய கடித‌த்தின் அடிப்படையில், தேவையான நடவடிக்கை எடுக்க‌க்கோரி, தமிழக டிஜிபிக்கு மத்திய அரசு உத்தரவிட்டதாகவும் ஆனால், 13 மாதங்கள் ஆகியும் டிஜிபி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதனால், மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்