மோடிக்கு கொலை மிரட்டல் கடிதம்.. பா.ஜ.க. அலுவலகத்தை அலறவிட்ட ஜோசப் ஜான்

x

கேரளா வருகை தரும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து, பா.ஜ.க. மாநிலக்குழு அலுவலகத்திற்கு கடிதம் வந்துள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மத்திய பிரதேசத்திலிருந்து 24ம் தேதி தனி விமானம் மூலம் கொச்சி வரும் பிரதமர், மாலையில் கொச்சி கப்பல் தளத்தில் நடைபெறும் ரோட் ஷோவில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து தேவார கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பா.ஜ.க கட்சி கூட்டத்தில் பேசுகிறார். மறுநாள் திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பின்னர், மாலையில் பா.ஜ.க தலைவர்களை சந்தித்து உரையாடுகிறார். இரவு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விமானம் மூலம் பிரதமர் டெல்லி செல்கிறார். இந்நிலையில். கேரளா வரும் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து பா.ஜ.க மாநிலக் குழு அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தை சேர்ந்த ஜோசப் ஜான் என்பவர் பெயரில் அந்தக் கடிதம் வந்துள்ளது. உளவுத்துறை ஏடிஜிபியிடம் கடிதம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்