Go back modi என்ற கோஷத்தை கைவிடுவோம்...மோடியை வருக வருக என வரவேற்போம்...திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேச்சு

x

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, திராவிடர் கழகம் சார்பில் விளக்க சிறப்பு கூட்டம், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. இதில் பேசிய அவர், "சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்ட மதுரையில் வரும் 27-ஆம் தேதி அனைத்து கட்சியின் திறந்தவெளி கூட்டம் நடைபெறவுள்ளது. சேது சமுத்திர திட்டம் ஒரு வளர்ச்சி திட்டமாகும், இதனால் வேலைவாய்ப்பு பெருகும், இந்தியாவிற்கே இத்திட்டம் பாதுகாப்பாக அமையும் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு கைவிடவில்லை எனக் கூறியதை குறிப்பிட்டு, பின்னர் திட்டத்தை செயல்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது எனக் கேள்வி எழுப்பினார். இறுதியாக, இதில் உள்ள தடையாணையை நீக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்


Next Story

மேலும் செய்திகள்