"அமைச்சர் உதயநிதி ரயில்வே கேட் வழியா வரட்டும்" - அமைச்சர் துரைமுருகன்

x

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். அப்போது, விளையாட்டு மைதான பணிகள் முழுமை பெறாமல் இருப்பதை பார்த்த அமைச்சர் துரைமுருகன், அதை தூய்மைப்படுத்த வேண்டாம் என, அதிகாரிகளிடம் கூறினார். மேலும், விளையாட்டு மைதானத்துக்கு ரயில்வே கேட்டை கடந்துதான் அமைச்சர் உதயநிதி வர வேண்டும் என, அங்கிருந்த ஒருவர் கூறிய நிலையில், அந்த வழியாகவே வரட்டும், அப்போதுதான் விரைந்து பாலம் கட்டிக் கொடுப்பார் என, அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்