"இந்தியைக் கற்றுக் கொள்வது கட்டாயமில்லை" - இந்தி தின விழாவில் துணைவேந்தர் பேச்சு

x

இந்தியைக் கற்றுக் கொள்வது கட்டாயமில்லை என்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் கூறினார். அந்த பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக இந்தி தின விழாவில் பேசிய அவர், ஹிந்தி தினத்தை கொண்டாடுவதால் தங்கள் தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், ஒவ்வொருவருக்கும் தங்கள் தாய்மொழிதான் உயிர் என்றும் கூறினார். இந்தியை கற்றுக் கொள்வது கட்டாயம் இல்லை என்றும், அதே சமயம் இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதில் தவறில்லை என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்