பொதுக்கூட்டத்திற்கு தாமதமாக வந்த அமைச்சர் எ.வ. வேலு.. கிளம்பிச் சென்ற மக்கள்

x

மதுரையில், திமுகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்கு அமைச்சர் ஏ.வ. வேலு தாமதமாக வந்ததால், மக்கள் விரைவாகவே கூட்டத்தில் இருந்து கிளம்பிச் சென்றனர். திருமலங்கலம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அமைச்சர் ஏ.வ. வேலு வருகைக்கு முன்னரே ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். ஆனால், அமைச்சர் தாமதமாக வந்ததால் முன்னதாகவே காத்திருந்த மக்கள், அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்த போதே கிளம்பிச் சென்றனர். இதனால், நாற்காலிகள் காலியாக இருந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றும் நிலை ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்