தூக்கிலிடப்பட்ட ஈரானிய இளைஞரின் கடைசி ஆசை... "பிரார்த்தனை செய்ய வேண்டாம்...கொண்டாடுங்கள்..."

x

ஹிஜாப் போராட்ட வன்முறை தொடர்பாக தூக்கிலிடப்பட்ட இளைஞர் ரஹ்னாவார்டின் கடைசி ஆசையில் தனது கல்லறையில் யாரும் குரான் படிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

ஹிஜாப் சர்ச்சையில் 2 இளைஞர்கள் தூக்கிலிடப்பட்டனர். அதில் பொதுவெளியில் வைத்து தூக்கிலிடப்பட்ட ரஹ்னாவர்த் என்ற இளைஞரின் கடைசி ஆசை குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், "தன் கல்லறையில் யாரும் புலம்ப வேண்டாம்... குரான் படிக்க வேண்டாம்... பிரார்த்தனை செய்ய வேண்டாம்... கொண்டாடுங்கள்... மகிழ்ச்சியான பாடலுடன் கொண்டாடுங்கள்" என அவர் தெரிவித்துள்ள நிலையில், இணையத்தில் இந்த வீடியோ தீயாய்ப் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்