LAPTOP..? OR TABLET..? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்

x

அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் மேம்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

கோவையில் நடைபெற்ற நம்ம ஸ்கூல் திட்ட நிகழ்ச்சியில், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த திட்டத்தை தொடங்கும்போது 12 நிறுவனங்கள்தான் இருந்தன என்றும், தற்போது 132 நிறுவனங்கள் இணைந்துள்ளன என்றும் கூறினார். பள்ளிகளில் கழிவறைகள் பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிதிச்சுமைகளை களைந்த பிறகு மடிக்கணினி வழங்கலாமா அல்லது டேப்லெட்டாக கொடுக்கலாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்