நில அபகரிப்பு வழக்கு..முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரைகோர்ட்டுக்கு இழுத்த..சொந்த மருமகனின் குடும்பம்

x

சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நிலம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயக்குமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார். இதன் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக, 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்