பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - கொந்தளித்த அண்ணாமலை..

x

சென்னை விருகம்பாக்கத்தில் பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், திமுக நிர்வாகிகளின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டு உள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் நிர்வாகிகள் இவ்வாறு நடந்துகொண்டது, அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது என்றும் அவர் பதிவிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்