போலீஸ் எஸ்ஐ-யை வெறிகொண்டு விரட்டிய அரை நிர்வாண ஆசாமி - கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு

x
  • கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சப்-இன்ஸ்கெ;டர் ஒருவரை உடைந்த பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயற்சித்த முகாமை சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
  • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது.
  • இந்த முகாமைச்சேர்ந்த பிரபல ரவுடி ராபின்சன் (38) என்பவர் முகாமையொட்டிய மூடப்பட்ட வாகன கட்டுமான தொழிற்சாலையில் திருட முயற்சித்து உள்ளார்.
  • இதனை தட்டி கேட்ட பாதுகாவலர் முத்து (55) என்பவரை உண்டிகோலால் தாக்கி உள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
  • தகவலறிந்து முகாமிற்கு சென்று ரவுடி ராபின்சன்னை தற்போது பிடிக்க முயன்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் என்பவரையும், தனிப்பிரிவு காவலர் ராமதாஸ் என்பவரையும் அந்த ரவுடி உடைந்த பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்ய முற்பட்டார்.
  • இதனைக்கண்டு போலீசார் ஜீப்பை சுற்றி வந்து அங்கிருந்து உயிர் பயத்தில் அவனிடமா இருந்து தப்பினர்.
  • இந்த இந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் பிரபல ரவுடி ராபின்சன்னை வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்