காளத்தீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் - மனமுருக சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

x

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காளத்தீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மூலவருக்கு வேத மந்திரங்கள் முழங்க பால், சந்தனம், தேன், மஞ்சள், திருநீர் ஆகிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

மகா கும்பாபிஷேகத்தில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், கும்பாபிஷேகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதிகளான சுதாகர், சத்தியநாராயணன், பாரதிதாசன், மற்றும் தமிழ்நாடு காவல் வீட்டுவசதி வாரிய டிஜிபி விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்


Next Story

மேலும் செய்திகள்