முத்துசிவன் முத்தாரம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்

x

நெல்லை மாவட்டம் ஆனைகுடி முத்துசிவன் முத்தாரம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா 4 நாட்கள் விமர்சையாக நடைபெற்றது. நான்கு கால யாகசாலை பூஜைகளுடன், திருமுறை பாராயணம், வேத பாராயணம் ஆகியவை தினசரி பாடப்பட்டன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கும்ப கலசங்கள், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்