"அக். 2ம் தேதி காஷ்மீர் - கன்னியாகுமரி யாத்திரை" | கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்

x

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஆஜராக அமலாக்கத்துறை கட்டாயப்படுத்துவதை கண்டித்து, வரும் 21-ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் பொதுச் செயலாளர், மாநில பொறுப்பாளர்கள், மாநில தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளரிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, மாநில தலைநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

அக்டோபர் 2ம் தேதி ராகுல் காந்தி தலைமையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாதயாத்திரை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்