எரி சாராயம் எடுத்து சென்ற லாரி டயரில் திடீர் தீ! - கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு

x

எரி சாராயம் எடுத்து சென்ற லாரி டயரில் திடீர் தீ! - கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு


கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் எரி சாராயம் எடுத்து சென்ற லாரியின் டயர்களில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஹரியானாவில் இருந்து திருவாரூர் பகுதிக்கு 40 ஆயிரம் லிட்டர் எரி சாராயம் ஏற்றி வந்த டேங்கர் லாரியின் டயரில் உராய்வு ஏற்பட்டு தீ பற்றியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்