கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே, குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட்டில் சிறிய அளவிலான கம்பி இருந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

x
  • காவேரிப்பட்டினம் அருகே மோரனஅள்ளியில் உள்ள மளிகைக் கடையில், கவியரசு என்பவரின் மனைவி வித்யா மற்றும் அவரது மகள் தன்ஷீகா ஆகியோர் 5 ரூபாய் மதிப்புள்ள சாக்லேட் வாங்கியுள்ளனர்.
  • அந்த சாக்லேட்டை குழந்தை பிரித்து சாப்பிடும் போது, பாக்கெட்டுக்குள் சிறிய கம்பி இருந்ததை கண்டு தாய் வித்யா அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
  • இது குறித்து கடை உரிமையாளரிடம் சென்று கேட்டபோது, அந்த சாக்லேட்டை வாங்கிக்கொண்டு வேறு சாக்லேட் கொடுத்து சமாதானம் செய்து அனுப்பி விட்டதாக வித்யா கூறினார்.
  • இது குறித்து குழந்தைகளின் பெற்றோர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்