வினையான விளையாட்டு... விரட்டி விரட்டி பழி தீர்த்த தேனீக்கள்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, தேனீக்கள் கொட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் பகுதியில் உள்ள புளியமரம் ஒன்றில் தேனீக்கள் கூடு இருந்துள்ளது.

அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர், தேனீர் கூடும் மீது கல் எறிந்துள்ளனர். இதால், கலைந்து வந்த தேனீக்கள் அப்பகுதியில் இருந்த மக்களை விரட்டி விரட்டி கடித்துள்ளது.

தேனீக்கள் கடித்த‌தில், 10க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்