கிருஷ்ணகிரி அருகே சூடா தோசை கேட்டதும் சிலிண்டர் காலியானதால் மனைவிக்கும் மருமகளுக்கும் கத்திக்குத்து - பேரக்குழந்தையையும் விட்டு வைக்காத கொடூரம்

x
  • கிருஷ்ணகிரி அருகே சூடாக தோசை கேட்டு சாப்பிட்டு கொண்டிருந்த நபர், திடீரென சிலிண்டர் காலியான ஆத்திரத்தில் குடும்பத்தையே கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது..
  • கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த என்.மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சம்பவத்தன்று இவரது மனைவி மாதம்மாள் தோசை சுட்டுக் கொடுத்துள்ளார்.
  • அப்போது, சூடாக இன்னும் இரண்டு தோசைகள் வேண்டும் என கணேசன் கேட்ட போது, எதிர்பாரதவிதமாக சிலிண்டர் காலியுள்ளது.
  • இதனால், ஆத்திரமடைந்த கணேசன் வீட்டில் இருந்த கத்தியால் மனைவியை தாக்கியுள்ளார்.
  • இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மருமகள் கையில் குழந்தையுடன் கணேசனை தடுக்க முற்படவே, மருமகளும், கையில் இருந்த குழந்தையும் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இதில், பலத்த காயமடைந்த மூவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
  • இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவான கணேசனை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்