காய்கறி மாலை.. கைகளில் பிச்சை பாத்திரம்... நூதன போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்

x
  • கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சிப்காட் தொழிற்பூங்கா அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தங்கள் நிலத்தில் தொழிற்பூங்கா அமைவதை விரும்பாத விவசாயிகள், உத்தனப்பள்ளியில் இருந்து காய்கறி மாலை அணிந்தும், கைகளில் பிச்சை பாத்திரம் ஏந்தியும் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பயணமாக வந்தனர்.
  • சுமார் 15 கிலோ மீட்டர் நடந்து வந்த அவர்கள், கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டபடி கனவ ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • அவர்களை வட்டாட்சியர் அனிதா மற்றும் போலீசார், சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்