ஆபத்தை உணராமல் போனில் வீடியோ எடுத்த இளைஞரை மிதித்து கொன்ற யானை - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

x
  • கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே காட்டு யானை மிதித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • போச்சம்பள்ளி அடுத்த பாரூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம் குமார்.
  • இவர், இன்று காலை மோட்டுப்பட்டி மலை அடிவாரப் பகுதி அருகே சென்ற போது அப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் வந்துள்ளது.
  • அப்போது ராம் குமார் யானைகளை செல்போனில் படம் பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
  • இதில் யானை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • அவரது சடலம் உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வனத்துறையினர் யானையை பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்