அரசுப் பள்ளி மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்! - தலைமறைவாக உள்ள 2 ஆசிரியர்களுக்கு வலை

x
  • கிருஷ்ணகிரி அருகே அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் 2 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் எலத்தகிரியில் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
  • இந்த பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
  • இங்கு வரலாறு ஆசிரியராக பணிபுரியும் 59 வயதான ராஜா என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
  • மேலும் ஆய்வக உதவியாளரான நடேசனும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததும் உறுதியான நிலையில் மாணவிகள் இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் சொல்லவே, பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
  • இதன்பேரில் 2 பேர் மீதும் போக்சோவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.
  • அதேநேரம் இவர்கள் 2 பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்