கொடுத்த பணத்தை கேட்ட ராணுவ வீரர் - பயங்கரமாக தாக்கிய இருவர்...

x
  • கிருஷ்ணகிரி அருகே கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட ராணுவ வீரரைத் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • ராணுவத்தில் பணியாற்றும் கொண்டேபள்ளியைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர், சஞ்சலப்பட்டியைச் சேர்ந்த சந்திரனை சந்தித்து கடனாக கொடுத்த 50 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கேட்டுள்ளார்.
  • அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டு, சந்திரன், அவரது தாய் சரோஜா, உறவினர் செல்வி மூவரும் சேர்ந்து சுப்பிரமணி, உடன் சென்ற உறவினர் சந்துரு இருவரையும் தாக்கியதாகத் தெரிகிறது.
  • இதில் காயமடைந்த சுப்ரமணி, கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த சம்பவம் தொடர்பாக, சந்திரன், செல்வி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்