வீடியோ கேம் விளையாடியதை கண்டித்த பெற்றோர்... தற்கொலை செய்து கொண்ட 8ம் வகுப்பு மாணவன் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

x
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், செல்போனில் கேம் விளையாடுவதற்கு நெட் ரீசார்ஜ் செய்யாததால் 8ம் வகுப்பு மாணவன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
  • கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியை சேர்ந்த சுசிகரன் - வித்யா சரஸ்வதி தம்பதியின் மகன் குகன், நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தான்.
  • வீட்டில் இருந்த 2 செல்போனில், நண்பர்களுடன் வீடியோ கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
  • இந்நிலையில், 2 செல்போனிலும் ரீசார்ஜ் செய்யப்படாததால் மனவேதனை அடைந்த குகன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
  • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்