இறப்புக்கு சென்று திருப்பியவரை கட்டையால் அடித்து கொன்ற பக்கத்து வீட்டு தம்பதி - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

x
  • கோவை அருகே இறப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • கோவை மாவட்டம், அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி.
  • இவர், தனது உறவினர் ஒருவரின் இறப்புக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.
  • அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி தாமரை இருவரும், ரங்கசாமியை வழிமறித்து இறப்பு வீட்டிற்கு சென்று விட்டு தங்கள் வீட்டு வழியாக செல்லக் கூடாது எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
  • பிரச்சனை ஒரு கட்டத்தில் முற்றியதை தொடர்ந்து, ரங்கசாமியை கட்டையால் தாக்கியுள்ளனர்.
  • இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக கணவன், மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்