"தை பிறந்தால் வழி பிறக்கும்"... குழந்தைகளுக்கு கோயிலில் சோறூட்டிய பெற்றோர்

x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் குழந்தைகளுக்கு தம்பதிகள் சோறூட்டி மகிழ்ந்தனர்... அதிகாலையில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வந்ததால் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தை முதல் நாள் என்பதால் தங்களுடைய குழந்தைகளுக்கு முதன் முதலாக சோறூட்டும் நிகழ்வும் நடைபெற்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தங்களின் குழந்தைகளுடைய வருங்காலம் மிகச் சிறப்பாக இருக்கவும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலின் அடிப்படையில் இதை கடைப்பிடிப்பதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்