கோவை சம்பவம் - வைகோ பரபரப்பு பேட்டி

x

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு நாடுகளில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்கெல்லாம் உளவுத்துறை கடமை தவறி விட்டதாக கூற முடியுமா என கேள்வி எழுப்பினார். மேலும் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலின், டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்ததாகவும் வைகோ பாராட்டு தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்