சூடு பிடிக்கும் கொடநாடு வழக்கு - சசிகலாவிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்

x

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் அடுத்தகட்டமாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே.சசிகலா, முன்னாள் MLA ஆறுகுட்டி ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் கனகராஜ் உயிரிழந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி எடப்பாடி பகுதியை சேர்ந்த ஜோதிடரை தனது மனைவியுடன் சென்று சந்தித்து இருப்பதும் , அப்போது ஜாதகத்தில் கண்டம் இருப்பதாக ஜோதிடர் சொல்லியிருப்பதும் சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து கனகராஜ் சந்தித்த ஜோதிடரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். மே முதல் வாரத்தில் இவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட இருப்பதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொடநாடு கொலை- கொள்ளை வழக்கு விசாரணை ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிப்பதால் மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்