கொடநாடு வழக்கு - நேபாளம் விரையும் சிபிசிஐடி போலீசார் | Kodanad Case

x

கொடநாடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

2017ல் நடந்த கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி மாதவன் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி முருகவேல், சந்திர சேகர், அண்ணாதுரை, வினோத் உள்ளிட்ட 3 டிஎஸ்பிக்கள், ஒரு ஆய்வாளர் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்படவுள்ளது. தனிப்படை விசாரித்தது போலவே சிபிசிஐடி போலீசாரும் கோவையில் அலுவலகம் அமைத்து விசாரணை நடத்த உள்ளனர். கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்த தினேஷ் தற்கொலை வழக்கு தொடர்பாக அவர்களின் வீட்டிற்கே சென்று விசாரிக்கவும், கனகராஜ் விபத்து சம்பவம் தொடர்பாக சேலத்திற்கு சென்று விசாரணை செய்யவும் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் கொடநாடு சம்பவத்தில் முக்கிய நபரான காவலாளி கிருஷ்ண தாபா நேபாளத்தில் இருக்கும் நிலையில் அங்கு சென்று விசாரணை மேற்கொள்ள தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்