குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து.. கல்வி நிறுவனங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை

x
    • கேரளா மாநிலம் பிரம்மபுரம் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு, புகை மண்டலமாக காட்சி அளிக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
  • கொச்சி மாநகராட்சிக்குட்பட்ட பிரம்மபுரத்தில், 110 ஏக்கரில் செயல்பட்டு குப்பை கிடங்கில், கடந்த 2ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது.
  • 95 சதவீதம் தீ அணைக்கப்பட்ட போதிலும், கொச்சியில் உள்ள பல்வேறு பகுதிகள் புகை மண்டலம் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக, அங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • இதனிடையே, இன்று முதல் ஏழு நடமாடும் மருத்துவ பிரிவுகள் செயல்படும் என, ஆட்சியர் தெரிவித்தார்.
  • இதன் மூலம், சுவாச பிரச்னை இருப்பவர்களுக்கு அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என, ஆட்சியர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்