பட்டாக்கத்தி திருடர்களின் கைவரிசை..வெளியூர் சென்று திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..வெளியான cctv காட்சிகள்

x


காஞ்சிபுரத்தில் உயர்ரக பைக்கில் கத்தியுடன் வந்து, வெளியூர் சென்றிருப்பவர்களின் வீடுகளில் திருடிச் செல்லும் ஹைடெக் திருடர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திம்மசமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட ஜினகாஞ்சி நகர் குடியிருப்பு பகுதியில், இரவு நேரத்தில், உயர்ரக பைக்கில் ஹெல்மெட் ஜெர்கின் அணிந்து கொண்டு, பட்டா கத்தியுடன் வந்த மர்ம நபர்கள் 2 பேர், சுற்றும் முற்றும் நோட்டமிட்டனர். அங்கு வெளியூர் சென்றிருந்த அருள்குமார், மாரியப்பன் ஆகியோரின் வீடுகளில் நுழைந்து 6 சவரன் நகை, 300 கிராம் வெள்ளி, ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். வெளியூரில் இருந்து திரும்பி வந்த அருள்குமார், மாரியப்பன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில், பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஹைடெக் திருடர்கள் திருடும் சிசிடிவி காட்சியை வைத்து போலீசார், அவர்களை தேடி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்