இந்திய அணியில் கே.எல்.ராகுல் சேர்ப்பு

x

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணியில் கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கே.எல்.ராகுல் முழு உடற்தகுதி அடைந்துள்ளதாக பிசிசிஐயின் மருத்துவக்குழு அறிக்கை அளித்த நிலையில், கே.எல்.ராகுல் இந்திய அணியில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜிம்பாப்வே தொடரில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுவார் எனவும், தவான் துணை கேப்டனாக தொடர்வார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்