வருமான வரித்துறையினர் போல் நாடகமாடி தொழிலதிபர் கடத்தல் - மிரட்டி ரூ.30 லட்சம் பறித்த கும்பல்

x

ஐதராபாத்தில் வருமான வரித்துறையினர் போல் நாடகமாடி தொழிலதிபரை படத்தி பணம் பறித்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி, முரளி கிருஷ்ணா என்ற தொழிலதிபரை கடந்த மாதம் 27ஆம் தேதி கடத்திய கும்பல், அவரை மிரட்டி 30 லட்சம் ரூபாய் பறித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, முரளி கிருஷ்ணாவின் மைத்துனர் ராஜேஷ் என்பவரே கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது அம்பலமானது. இதையடுத்து, ராஜேஷ் உட்பட 7 கடத்தல் கும்பல் 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்