உடம்பு சரியில்லாததால் கடத்தப்பட்ட நபரை மருத்துவமனையில் சேர்த்த கடத்தல் கும்பல்

x

பெருந்துறையில் பணம் கொடுக்கல் - வாங்கல் தகராறில் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த அய்யாசாமி என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தனது நண்பவர் வைத்தியலிங்கம் மூலமாக பாஸ்கர் என்பவரிடம் இருந்து 12 லட்சம் ரூபாய் பணத்தை அய்யாசாமி கடனாக வாங்கியுள்ளார்.

இதில் 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை மட்டுமே அய்யாசாமி திரும்ப கொடுத்த நிலையில், மீதமுள்ள பணத்தை முறையாக திரும்ப வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரும், வைத்தியலிங்கமும் மேலும் இருவருடன் சேர்ந்து அய்யாசாமியை காரில் கடத்திச் சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அய்யாசாமி கடத்தப்பட்டு விழுப்புரத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை கடத்தல் கும்பல் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரத்துக்கு சென்ற பெருந்துறை போலீசார் அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அய்யாசாமியை மீட்டனர்.

பின்னர், அய்யாசாமியை கடத்தி சென்ற வைத்தியலிங்கம் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்