மது போதையில் நண்பனின் காரை கடத்தி விற்பனை - தெரியாமல் வாங்கி கம்பி எண்ணும் சிறை சினேகிதன்

x
  • திண்டிவத்தில், நண்பர்களுடன் மது அருந்திவிட்டு போதையில் திருடிச் சென்ற காரை, தாம்பரத்தில் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  • நெய்குப்பி பகுதியை சேர்ந்த தாஸ் என்பவர், தனது நண்பர்களாக ரஞ்சித் குமார், பெரியசாமி ஆகியோருடன் கடந்த மாதம் 31ஆம் தேதி திண்டிவனத்தில் மது அருந்தியதாக தெரிகிறது.
  • அப்போது, மதுபோதையில் இருந்த பெரியசாமி, தாஸின் காரை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
  • இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், தாம்பரம் அருகே அந்த காரை பறிமுதல் செய்தனர்.
  • பின்னர், காரில் இருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், திண்டிவனத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பது தெரியவந்தது.
  • மேலும், கஞ்சா கடத்திய வழக்கில் சிறையில் இருந்த போது, பெரியசாமியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன் அடிப்படையில் இந்த காரை தன்னிடம் கொடுத்து விற்றுத் தருமாறு பெரியசாமி கூறியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
  • இதனிடையே, மோகன்ராஜை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள பெரியசாமியை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்