RCB -யில் இருந்து விலகும் 'கோலி?'... பரபரப்பை கிளப்பிய பீட்டர்சன்

x

பெங்களூரு அணியில் இருந்து விராட் கோலி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறி உள்ளார். இந்த முறையும் கோப்பையை வெல்ல முடியாமல் ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூரு வெளியேறி உள்ளது. விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மற்ற வீரர்களின் பங்களிப்பு இல்லாததாலும், முக்கியமான போட்டிகளில் தடுமாறுவதாலும் பெங்களூருக்கு ஐபிஎல் கோப்பை எட்டாக்கனியாகத் திகழ்கிறது. இந்நிலையில், பெங்களூருவில் இருந்து விலகி டெல்லி அணிக்காக கோலி ஆட வேண்டும் என பீட்டர்சன் கூறி உள்ளார். ரசிகர்கள் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்