மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் மீண்டும் நடை திறப்பு... அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு நடையை திறந்து தீபாரதனை காண்பித்தார். பின்னர் ஆழி குண்டத்தில் நெய் தேங்காய் ஏறிய பின் பக்தர்கள் 18 படி ஏற அனுமதிக்கபட்டனர்
x

ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கிடையே, ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜையையொட்டி, ஜனவரி 12 ஆம் தேதி பந்தளத்திலிருந்து திருவாபரணம் ஊர்வலம் புறப்படுகிறது.

மகர விளக்கு பூஜை நிறைவுக்கு பிறகு, 20 தேதி காலை 7 மணிக்கு கோவில் நடை பந்தள ராஜா குடும்ப முன்னிலையில் நடை அடைக்கப்படும். மகர விளக்கு பூஜையையொட்டி, சன்னிதானத்தில் மட்டும் ஆயிரத்து 409 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்