வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார்... கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய நபர்... கைது செய்த போலீசாருக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி

x

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக கூறி, கைது செய்யப்பட்ட நபர், மயங்கி விழுந்து உயிரிழந்தார். திரிப்புனிதுரா பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, இரும்பனம் பகுதியை சேர்ந்த மனோகர் என்பவர், கவனக்குறைவாக இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்த போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போது, மயங்கி விழுந்தார். உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் உயிரிழந்து விட்டார். இதனிடையே, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த மனித உரிமை ஆணையம், உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்