அந்த மனசு தான் சார் கடவுள்... விமானம், ரயிலில் பழங்குடியின மாணவர்கள்...

x
  • ஏவிஏ குழுமம் மெடிமிக்ஸ் - நிறுவனத்தின் சார்பில் கேரளாவில் உள்ள பழங்குடியின பள்ளி மாணவர்கள், முதல்முறையாக விமானம் மற்றும் ரயிலில் சென்னைக்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
  • கேரள மாநிலம் அட்டப்பாடி கிராமத்தில் இயங்கி வரும் ஏபிஜே அப்துல் கலாம் பழங்குடியின பள்ளி மாணவர்களை, ஏவிஏ குழுமம் மெடிமிக்ஸ் - நிர்வாக இயக்குநர் ஏ.வி.அனூப், சந்தித்தார்.
  • அப்போது அந்த மாணவர்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்லவில்லை என்பதை உணர்ந்து கொண்ட அனூப், சென்னைக்கு விமானம் மற்றும் ரயில் மூலம் பழங்குடியின மாணவர்களை, சுற்றுலா அழைத்து சென்றார்.
  • அந்த பள்ளியில் இருந்து ஐந்தாம் வகுப்பு பயிலும் 22 மாணவர்கள் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி சென்னை வந்திறங்கிய நிலையில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள ரசீனா மேல்நிலைப்பள்ளியி​ல் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
  • பின்னர் அதே நாளில், விமானம் மற்றும் ரயில் மூலம் பழங்குடியின மாணவர்கள் கேரளா திரும்பினர்.
  • முதல்முறையாக விமானம், ரயிலில் பயணித்ததால் பழங்குடியின மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்

Next Story

மேலும் செய்திகள்