"அம்மா என்னை தூக்கு மா"...மேடையில் செல்ல பிள்ளை செய்த செயல்...பேச முடியாமல் திணறிய ஆட்சியர்

x

சர்வதேச திரைப்பட நிகழ்வில் பங்கேற்று பேசிய மாவட்ட ஆசியரிடம், மேடையில் அவரது செல்ல மகன் சுட்டித்தனம் செய்த வீடியோ சர்ச்சியாகியுள்ளது.

பத்தனம் திட்டா மாவட்ட ஆட்சியராக இருக்கும் திவ்யா ஐயர், சர்வதேச திரைப்பட விழாவில் தனது மகனுடன் பங்கேற்றார்.

மேடையில் திவ்யா ஐயர் பேசிக் கொண்டிருந்த போது அங்கு சென்ற குழந்தை, தன்னை தூக்கும்படி கூறியுள்ளது.

உடனே மகனை தூக்கி கொண்டு ஆட்சியர் பேசிய போது, செல்ல பிள்ளையின் சேட்டையால் அவர் தனது பேச்சை தொடர முடியாமல் தடுமாறினார்.

ஆட்சியரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலானதும், விமர்சனங்கள் எழுந்தன.

அதற்கு, ஐ.நா.வுக்கு குழந்தையுடன் சென்று பெண்கள் உரையாற்றியதை சுட்டிக்காட்டிய திவ்யா ஐயர், விடுமுறை நாள் என்பதால் தன்னுடன் மகனை அழைத்து சென்றது எந்த வகையில் தவறாகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்